Wednesday, October 27, 2010

மௌன அஞ்சலி

மணி கணக்கில் நீடிக்கின்றன
மௌனங்கள்
யதார்த்தமாய் ...

சிநேகிதர்களுக்குள்
சண்டை வந்து
பேசாமலிருந்தது ...

காட்டிக் கொள்ள முடியாத
கோபத்தைக் காட்ட
கடைபிடித்த மௌனம் ...

உள்ளுக்குள் உடைபட்டு
உருகியழுது
கண்ணீருடன் கலந்த மௌனம் ...

பார்வைப் பரிமாற்றங்களின் போது
வார்த்தைகள் வேண்டாம் என்றாக
விழி மொழி பேசிய மௌனம் ...

துணை யாருமற்ற
தனிமை நேரங்களில்
துணையாக நின்ற மௌனம் ...

ஆனாலும்

மறைந்த தலைவருக்காக
முழு நிமிட அஞ்சலியாக
மௌனம் காப்பது மட்டும்
கஷ்டமாகத் தான் இருக்கிறது!