பாடலை வடித்தவன்
கவிஞன் .... அதன்
பெருமையை அறிந்தவன்
ரசிகன் ...!
காக்கைக்கும்
தன் குஞ்சு
பொன் குஞ்சு ..
ஆம்!
படைத்தவனுக்குக் காக்கை ....
படித்தவனுக்கோ குயில் !
எழுதிய கவிஞன் இல்லையென்றால்
பாடல் பிறந்திருக்க முடியாது ...
பழகிய ரசிகன் இல்லையென்றால் -அது
பிறந்ததில் பொருளே கிடையாது !
பாடலுக்கு யாருடன்
அதிக உறவு ?
கவிஞனுடனா?
ரசிகனுடனா?
Thursday, May 13, 2010
Friday, May 7, 2010
ஒரு பறவையின் பாடல்
எனக்கும்
இறக்கைகள் உண்டு
என்பதையே மறந்திருந்தேன் ...
ஏன் எனக்கு
பறக்க கற்றுதந்தாய் ?
விண்ணிலே நாம் பறந்த
வினோத கணங்களை
கண்ணீருடன் நினைக்கிறேன்
இன்று ...
நினைத்த பொழுதில்
சிறகடித்து செல்ல
நீயோ சுதந்திர பறவை ...
கூண்டின் கதவு வழி
கண் தெரியும் வானம் ...
இயலாமையுடன் வெறிக்கிறேன் -என்
இறக்கைகளே சுமையாக . . .!
இறக்கைகள் உண்டு
என்பதையே மறந்திருந்தேன் ...
ஏன் எனக்கு
பறக்க கற்றுதந்தாய் ?
விண்ணிலே நாம் பறந்த
வினோத கணங்களை
கண்ணீருடன் நினைக்கிறேன்
இன்று ...
நினைத்த பொழுதில்
சிறகடித்து செல்ல
நீயோ சுதந்திர பறவை ...
கூண்டின் கதவு வழி
கண் தெரியும் வானம் ...
இயலாமையுடன் வெறிக்கிறேன் -என்
இறக்கைகளே சுமையாக . . .!
Subscribe to:
Posts (Atom)