எனக்கும்
இறக்கைகள் உண்டு
என்பதையே மறந்திருந்தேன் ...
ஏன் எனக்கு
பறக்க கற்றுதந்தாய் ?
விண்ணிலே நாம் பறந்த
வினோத கணங்களை
கண்ணீருடன் நினைக்கிறேன்
இன்று ...
நினைத்த பொழுதில்
சிறகடித்து செல்ல
நீயோ சுதந்திர பறவை ...
கூண்டின் கதவு வழி
கண் தெரியும் வானம் ...
இயலாமையுடன் வெறிக்கிறேன் -என்
இறக்கைகளே சுமையாக . . .!
Subscribe to:
Post Comments (Atom)
Sir, Super ah iruku... Neenga class edukum pothu solrathu polavey ... Can get another chance to hear ur voice in class ?
ReplyDeleteInfanta