Friday, May 7, 2010

ஒரு பறவையின் பாடல்

எனக்கும்
இறக்கைகள் உண்டு
என்பதையே மறந்திருந்தேன் ...

ஏன் எனக்கு
பறக்க கற்றுதந்தாய் ?

விண்ணிலே நாம் பறந்த
வினோத கணங்களை
கண்ணீருடன் நினைக்கிறேன்
இன்று ...

நினைத்த பொழுதில்
சிறகடித்து செல்ல
நீயோ சுதந்திர பறவை ...

கூண்டின் கதவு வழி
கண் தெரியும் வானம் ...

இயலாமையுடன் வெறிக்கிறேன் -என்
இறக்கைகளே சுமையாக . . .!

1 comment:

  1. Sir, Super ah iruku... Neenga class edukum pothu solrathu polavey ... Can get another chance to hear ur voice in class ?

    Infanta

    ReplyDelete