Wednesday, June 30, 2010

குழலினிது.....

உன் அடுப்பில்
விறகாகி
எரியும் புல்லாங்குழல்
நான் ....

பல்லாயிரம் செவிகளின்
பசி தீர்க்கத் தெரிந்தும்
உன் ஒருவனின்
பசிக்காக என்னைத் தருகிறேன்...

நீ எரித்துக் கொண்டிருப்பது
என் மூங்கிலை
மட்டுமல்ல...
எனக்குள் உறைந்திருந்த
ராகங்களையும் தான் !

உன்
பசியில் அனைத்தும்
பறந்து போனது....

அதனால் என்ன ?

இசைபதற்கு நீயின்றி
குழலாய் இருப்பதை விட- உன்
பசியைத் தணிக்க
விறகாவதே என் விருப்பமும்.....

ஆனால் ...

எரிந்த என் சாம்பலிலிருந்து
இன்னிசை கசியும்
என்று மட்டும்
எதிர்பார்த்து
ஏமாந்திடதே!

No comments:

Post a Comment