"அம்மா"
என்ற ஒரு சொல்லன்றி
பேச வார்த்தைகள் இல்லாதபோது
மழலை பிறந்தது ...
பள்ளி பாடல்களின்
வரிகள் குழற
ராகம் மாறாமல் பாடிய போது
மழலை மணந்தது ....
பிறகு...
வளர வளர
மொழி சீரடைந்து
மழலை மறந்தது .....
ஆனால்......
எத்தனை ஆண்டுகள் கடந்தும்
தாயின் மடி புதைந்து
அழும்போது....
"அம்மா" என்ற சொல்லன்றி
பேசும் வார்த்தைகள்
வராத போது புரிந்தது....
மழலை இன்னும் மீதமிருக்கிறதென்று!
kalakitta po :) :)
ReplyDelete