Tuesday, June 19, 2012

துடிப்பு!

கொல்லப்பட்டவன் ...
என் நாட்டவன் ,
என் இனத்தவன் ,
என் மதத்தவன் ,
என் சாதிக்காரன் 
என்ற வார்த்தைகள் 
துடிக்க வைப்பதுப்போல் 
துடிக்க வைப்பதில்லை .......
' ஒரு மனிதன் கொல்லப்பட்டான் '
எனும் போது !

No comments:

Post a Comment