ஒரு நடிகை
காதலித்தால்......
எப்படி வந்தது
இந்த காதலென்று
எடுத்துக் கூற
கதாசிரியர் இல்லாத போது...
வெட்கப்படுவது எப்படி
என்று இயக்குனர்
கற்றுக் கொடுக்காத போது...
காதலனிடம் பேச வேண்டிய
கவிதை வரிகளைக்
கற்பிக்க
வசன கர்த்தா இல்லாத போது....
கன்னச் சிவப்பை
ஒப்பனைகள்
கொண்டு வராத போது....
பல நூறு பார்வையும்
பல வண்ண வெளிச்சமும்
இல்லாத போது...
ஒரு நடிகை
காதலித்தால் ....
காமிராக் கண்கள்
சுட்டு விடாத
அவள் முகத்தின்
உண்மை காதல்
அவள் மனத்திரையில் மட்டுமே
பதிவு செய்யப் பட்டிருக்கும்!
காதலித்தால்......
எப்படி வந்தது
இந்த காதலென்று
எடுத்துக் கூற
கதாசிரியர் இல்லாத போது...
வெட்கப்படுவது எப்படி
என்று இயக்குனர்
கற்றுக் கொடுக்காத போது...
காதலனிடம் பேச வேண்டிய
கவிதை வரிகளைக்
கற்பிக்க
வசன கர்த்தா இல்லாத போது....
கன்னச் சிவப்பை
ஒப்பனைகள்
கொண்டு வராத போது....
பல நூறு பார்வையும்
பல வண்ண வெளிச்சமும்
இல்லாத போது...
ஒரு நடிகை
காதலித்தால் ....
காமிராக் கண்கள்
சுட்டு விடாத
அவள் முகத்தின்
உண்மை காதல்
அவள் மனத்திரையில் மட்டுமே
பதிவு செய்யப் பட்டிருக்கும்!
No comments:
Post a Comment