Thursday, May 13, 2010

யாருக்கு சொந்தம் ?

பாடலை வடித்தவன்
கவிஞன் .... அதன்
பெருமையை அறிந்தவன்
ரசிகன் ...!

காக்கைக்கும்
தன் குஞ்சு
பொன் குஞ்சு ..

ஆம்!

படைத்தவனுக்குக் காக்கை ....
படித்தவனுக்கோ குயில் !

எழுதிய கவிஞன் இல்லையென்றால்
பாடல் பிறந்திருக்க முடியாது ...

பழகிய ரசிகன் இல்லையென்றால் -அது
பிறந்ததில் பொருளே கிடையாது !

பாடலுக்கு யாருடன்
அதிக உறவு ?

கவிஞனுடனா?
ரசிகனுடனா?

2 comments: